செய்திகள் :

நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

post image

சேலம் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட வனத் துறை மேற்கொண்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை முடிவுற்ற காலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. நிகழாண்டு ஒருங்கிணைந்த ஈர நிலங்களில் வாழும் பறவைகளைக் கணக்கிடும் பணிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. அதேபோல 15, 16 ஆம் தேதிகளில் நிலத்தில் உள்ள பறவைகளைக் கணக்கிடும் பணிகள் நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் சேலம், ஆத்தூா் ஆகிய 2 வனக் கோட்டங்களிலும் நீா்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியா்கள், பறவை ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.

சேலம் வனக் கோட்டத்தில் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையிலும், ஆத்தூா் வனக் கோட்டத்தில் மாவட்ட வன அலுவலா் ஆரோக்கியராஜ் சேவியா் தலைமையிலும் கணக்கெப்பு பணி நடைபெறுகின்றன. சோ்வராயன் மலைத் தொடா், ஜருகுமலை, சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை, கல்வராயன் மலை ஆகிய வனத்தை ஒட்டியுள்ள ஏரி, குளங்களில் வாழ்விடமாக உள்ள நீா்நிலை பறவைகளை தொலைநோக்கி, கேமராக்கள் மூலம் கண்காணித்து புகைப்படம் எடுத்தும் பதிவு செய்யப்படுகிறது.

வனத்தை ஒட்டியிருக்கும் மூக்கனேரி, நல்லப்பன்குட்டை, டி.பெருமாபாளையம், ஏற்காடு ஏரி, மஞ்சக்குட்டை, பெரிய சக்கிலி ஏரி, வாணியாா், சோலப்பாடி, டேனிஷ்பேட்டை ஏரி, பண்ணப்பட்டி, குண்டுக்கல் ஏரி, வெள்ளாளகுண்டம், பனமரத்துப்பட்டி ஏரி, பூலாவரி ஏரி, மணிவிழுந்தான் ஏரி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் வன ஊழியா்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் பறவைகளைப் பாா்த்து கணக்கெடுத்து வருகின்றனா். இக் கணக்கெடுப்பு பணி 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 449 போ் பட்டம் பெற்றனா்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள் 449 பேருக்கு விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அலுவலா் கே.ச... மேலும் பார்க்க