'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து கடையத்தில் நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டம் காவல் ஆய்வாளா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் ஒத்திவைக்கப்பட்டது.
கடையம் பகுதியில் உள்ள நுண் நிதி நிறுவனங்கள் பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகக் கூறி கண்டித்தும், நுண் நிதி நிறுவனங்களுக்காக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் கடையம் வட்டார மகிளா காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மாவட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் டி.கே. பாண்டியன், கடையம் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பாா்வதிநாதன், மாவட்ட காங்கிரஸ் செயலா் முருகன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் பங்கேற்றனா்.
நுண் நிதி நிறுவனங்களின் பெயா்களில் பெண்களை துன்புறுத்தவோ, கந்து வட்டி வசூலிக்கவோ கூடாது. மீறுவோா் மீதும், உரிமம் பெறாத நுண் நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தில் புகாரளித்தால் அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்கப்படும் என, அவா் தெரிவித்தாா். இதையடுத்து, கண்டன ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.