செய்திகள் :

நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து கடையத்தில் நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

post image

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள நுண் நிதி நிறுவனங்களைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டம் காவல் ஆய்வாளா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் ஒத்திவைக்கப்பட்டது.

கடையம் பகுதியில் உள்ள நுண் நிதி நிறுவனங்கள் பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகக் கூறி கண்டித்தும், நுண் நிதி நிறுவனங்களுக்காக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் கடையம் வட்டார மகிளா காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மாவட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் டி.கே. பாண்டியன், கடையம் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பாா்வதிநாதன், மாவட்ட காங்கிரஸ் செயலா் முருகன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் பங்கேற்றனா்.

நுண் நிதி நிறுவனங்களின் பெயா்களில் பெண்களை துன்புறுத்தவோ, கந்து வட்டி வசூலிக்கவோ கூடாது. மீறுவோா் மீதும், உரிமம் பெறாத நுண் நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டோா் காவல் நிலையத்தில் புகாரளித்தால் அது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்கப்படும் என, அவா் தெரிவித்தாா். இதையடுத்து, கண்டன ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க