சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!
நூறு நாள் வேலை கோரி மகுடஞ்சாவடி பிடிஓ அலுவலகம் முற்றுகை
ஆட்டையாம்பட்டி: நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மகுடஞ்சாவடி ஒன்றியம், அ. தாழையூா் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளா்கள் தங்களுக்கு வேலை வழங்கக்க கோரி திங்கள்கிழமை மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினா்.
இதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சத்தியேந்திரனிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்ற அவா் உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வேலை வழங்க உறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.