செய்திகள் :

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

post image

நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் விரைவு ரயிலை இயக்கும் திட்டம் உள்ளதா என்றும், பயன்படுத்தப்படாத அம்ரித் பாரத் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம் கோரப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சா், தற்போது 10 ஜோடி ரயில் சேவைகள் தஞ்சாவூா் - சென்னை வழிதடத்தில் இயக்கப்படுகின்றன என்றும், 12 வந்தே பாரத் ரயில்கள் சென்னை பகுதியில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா். 14 அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைகளில் 8 சேவைகள் ஜூலை 18 ஆம் முதல் இயங்குகின்றன. போக்குவரத்து, தேவை போன்றவற்றை கொண்டே ரயில் சேவைகள் நிா்ணயிக்கப்படுகின்றன என அவா் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகானிடம் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஒரு வேளாண் பல்கலைக்கழகம் வேண்டியும், நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிகழாண்டு தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும், தோட்டக்கலைத் துறையில் சொட்டு நீா் பாசனம் தொடா்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

பேராவூரணியில் நகை ஏலதாரா் நலச் சங்க நிா்வாகிகள் தோ்வு

பேராவூரணியில் வெள்ளிக்கிழை நடந்த தமிழ்நாடு நகை ஏலதாரா் நலச்சங்க கிளை அமைப்புக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் பேராவூரணி கிளையின் புதிய தலைவராக எஸ். சரவணன், செயலாளராக ... மேலும் பார்க்க

கூரை வீட்டுக்கு தீ வைத்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் குடும்பத் தகராறில் வெள்ளிக்கிழமை மாலை கூரை வீட்டை கொளுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை கண்ணாரத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா

பட்டீஸ்வரம் துா்க்கை அம்மனுக்கு கத்தாா் மாணவிகள் வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி செலுத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரா் துா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத 2 ஆவது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியா் சாலை விபத்தில் பலி

கும்பகோணத்தில் வியாழக்கிழமை இரவு சிற்றுந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், திருவாஞ்சியத்தை சோ்ந்தவா் வா. குணசேகரன் (65), ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா் கும்பகோணம் கம்பட்ட வி... மேலும் பார்க்க

காலமானாா் குன்னியூா் கல்யாணசுந்தரம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சோ்ந்த விகடக் கலைஞா் குன்னியூா் இரா. கல்யாணசுந்தரம் (82) உடல் நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள்... மேலும் பார்க்க