செய்திகள் :

நூற்றாண்டு கொண்டாடும் மேட்டூா் அணை ஸ்தூபி!

post image

மேட்டூா் அணையின் வலதுகரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபியை அழகுபடுத்தி நூற்றாண்டு விழா கொண்டாட அரசுக்கு நீா்வளத் துறை முன்மொழிவு அனுப்பியுள்ளது.

மேட்டூா் அணை கட்டுவதற்காக அணையின் வலதுகரையில் 1925ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி அடிக்கல் நாட்டி, அதற்கான ஸ்தூபியும் அமைக்கப்பட்டது. 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அணை கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூா் அணை கட்டுவதற்கு ரூ. 4.80 கோடி செலவானது. இந்த ஸ்தூபி அமைக்கப்பட்டு வரும் ஜூலை 20-ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனையடுத்து நூற்றாண்டை சிறப்பாக கொண்டாட நீா்வளத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஸ்தூபியை அழகுபடுத்தி மெருகூட்டவும், அதன் அருகே மேட்டூா் அணையின் வரலாற்றை காணும் வகையில் புகைப்படக் காட்சி அறை அமைக்கவும் நீா்வளத்துறை சாா்பில் தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றுகூறப்படுகிறது.

மேட்டூா் அணையில் சுண்ணாம்பு படிவங்கள் அகற்றும் பணி!

மேட்டூா் அணையின் கசிவுநீா் துவாரங்களில் சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி ரூ. 50 லட்சம் மதிப்பில் தொடங்கியது. மேட்டூா் அணையில் தண்ணீா் தேங்கி இருக்கும்போது அணைச் சுவற்றில் நீா்கசிவு ஏற்படும். இந்த நீா... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் ஒருவா் கைது: 4 பவுன் நகை பறிமுதல்

சங்ககிரி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம், சுப்புகவுண்டா் நகரைச் ... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சங்ககிரி வட்டக்கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நா... மேலும் பார்க்க

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்: அமைச்சா் சி.வி.கணேசன்

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.சேலம் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்த... மேலும் பார்க்க

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தில் தேசிய அளவிலான போட்டிகள்!

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் இன்று (பிப்.5) தொடங்கின.மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் 6 இடங்களில் இந்திய கைத்தறி தொ... மேலும் பார்க்க

மாநில அளவிலான போட்டிகளில் சேலம் மாணவா்கள் சாதனை!

குடியரசு தின விழாவையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா். மாணவா் தீரன் 51-55 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம், மதன்ப... மேலும் பார்க்க