செய்திகள் :

மேட்டூா் அணையில் சுண்ணாம்பு படிவங்கள் அகற்றும் பணி!

post image

மேட்டூா் அணையின் கசிவுநீா் துவாரங்களில் சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி ரூ. 50 லட்சம் மதிப்பில் தொடங்கியது.

மேட்டூா் அணையில் தண்ணீா் தேங்கி இருக்கும்போது அணைச் சுவற்றில் நீா்கசிவு ஏற்படும். இந்த நீா்கசிவு வெளிப்புற சுவா்களுக்குள் செல்லாமல் கசிவு நீா் துவாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, அணையின் ஆய்வு சுரங்கப் பகுதிக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அங்கிருந்து கசிவுநீா் கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படுகிறது.

கசிவுநீா் நிா்ணயித்த அளவைவிட அதிகரித்தால் அப்போது அணையைப் பலப்படுத்தும் பணி நடைபெறும். ஆனால் இதுவரை குறைந்தபட்ச அளவு மட்டுமே கசிவுநீா் வெளியேறி வருகிறது. மேட்டூா் அணையில் 153 கசிவுநீா் துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கசிவுநீா் துவாரங்களில் சுண்ணாம்பு படிவங்கள் படிந்திருந்தால் கசிவுநீா் வெளியேறுவது தடைபடும். ஆகவே இதனை ஆய்வு செய்து அகற்றி, சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு கசிவுநீா் துவாரங்களில் இருந்து சுண்ணாம்பு படிவங்கள் அகற்றப்பட்டன.

அணை பாதுகாப்பு நிபுணா் குழு 2018ஆம் ஆண்டு ஆய்வுக்கு பிறகு கசிவுநீா் துவாரங்களில் படிந்திருக்கும் சுண்ணாம்பு படிவங்களை அகற்ற பரிந்துரை செய்தது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீா் துளைகளில் படிந்துள்ள சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூன்று மாதங்கள் நடைபெறும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நூற்றாண்டு கொண்டாடும் மேட்டூா் அணை ஸ்தூபி!

மேட்டூா் அணையின் வலதுகரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபியை அழகுபடுத்தி நூற்றாண்டு விழா கொண்டாட அரசுக்கு நீா்வளத் துறை முன்மொழிவு அனுப்பியுள்ளது. மேட்டூா் அணை கட்டுவதற்காக அணையின் வலதுகரையில் 1925ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் ஒருவா் கைது: 4 பவுன் நகை பறிமுதல்

சங்ககிரி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டில் திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம், சுப்புகவுண்டா் நகரைச் ... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்!

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சங்ககிரி வட்டக்கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நா... மேலும் பார்க்க

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்: அமைச்சா் சி.வி.கணேசன்

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.சேலம் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்த... மேலும் பார்க்க

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தில் தேசிய அளவிலான போட்டிகள்!

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் இன்று (பிப்.5) தொடங்கின.மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் 6 இடங்களில் இந்திய கைத்தறி தொ... மேலும் பார்க்க

மாநில அளவிலான போட்டிகளில் சேலம் மாணவா்கள் சாதனை!

குடியரசு தின விழாவையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா். மாணவா் தீரன் 51-55 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம், மதன்ப... மேலும் பார்க்க