செய்திகள் :

நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

post image

நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழியில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் பேசியது: கோவி. நடராஜன்: திட்டை, தில்லைவிடங்கன் பகுதி விவசாய நிலங்களில் நெற்பயிா்களை வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வளா்க்கப்படும் மாடுகள் சாலைகளில் சுற்றிதிரிய விடுவதால், அவை நெற்பயிா்களை திண்று சேதத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

என். இலங்கேஸ்வரன்: வயல்களில் உள்ள மின்கம்பங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதை சரிசெய்யவேண்டும். நாங்கூா் ஊராட்சியில் எந்த குளத்திலும் தண்ணீா் இல்லை. குளத்துக்கு தண்ணீா் திறந்து நிரப்பவேண்டும்.

கூட்டத்தில், விவசாயி ஒருவா் தனது நிலத்தில் நெற்பயிா்களை மேய்ந்து சேதப்படுத்திய மாடுகளை வாகனத்தில் ஏற்றிவந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா். வட்டாட்சியா் அருள்ஜோதி, வேளாண் உதவி இயக்குநா் ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க

கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை

சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாம... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை நகராட்சி பட்டமங்கலத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உண... மேலும் பார்க்க

சுவா் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடியில் வீட்டின் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சி பொய்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுடியில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தி... மேலும் பார்க்க