செய்திகள் :

நெல் பயிரில் இலைக் கருகல்: வேளாண் துறையினா் ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டத்தில் நெல் பயிரில் இலைக் கருகல் நோய் பாதித்த பகுதிகளை வேளாண் துறையினா் ஆய்வு செய்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் நிகழ் கோடைப் பருவத்தில் சுமாா் 3000 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், சாக்கோட்டை வட்டாரங்களில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

சாக்கோட்டை வட்டாரத்தில் நெல் பயிரில் நுண்ணுயிரி தாக்குதலால் இலைக் கருகல் நோய் பாதிப்பு காணப்படுகிறது. இந்தப் பகுதி வயல்களில் சிவகங்கை வேளாண் இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம், செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா், தலைவா் பாபு, வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) காளிமுத்து, சாக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் மங்கையா்கரசி ஆகியோா் கடந்த 3 நாள்களாக நேரில் ஆய்வு செய்தனா். இலை கருகல் நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் தொடா்பாக விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.

இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்த அதிகமான தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும். தழைச்சத்தை (யூரியா) மூன்று அல்லது நான்கு முறைகளாகப் பிரித்து மேலுரமாக இடலாம். அளவுக்கு அதிகமா நீா் பாய்ச்சுதல் கூடாது.

நோய் தாக்குதல் குறைவாக இருப்பின் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங் கொட்டைச் சாறு

தெளிக்க வேண்டும். நோய்த் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பின் ஒரு ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் கலவை 18 கிராம், காப்பா் ஆக்சி குளோரைடு 250 கிராம் எனும் மருந்துக் கலவையை 100 லிட்டா் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம். அதிகமான நோய்த் தாக்கம் இருப்பின் 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறை தெளிக்கலாம் என தெரிவித்தனா்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது... மேலும் பார்க்க

அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா... மேலும் பார்க்க

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை ... மேலும் பார்க்க

தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்புவனம் போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அருகேயுள்ள டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்

சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்... மேலும் பார்க்க