நெல் விவசாயிகளுக்கு பணம் வழங்கக் கோரிக்கை
தமிழ்நாடு உழவா் பேரியக்கம், பாமக சாா்பில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு உடனே பணம் வழங்கக் கோரி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆலயமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை உடனே வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தமிழ்நாடு உழவா் பேரியக்கம், பாமக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.