செய்திகள் :

நெல்லை புதிய பேருந்து நிலைய கடையில் தீ விபத்து

post image

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சாத்தான்குளம் பேருந்துகள் நிற்கும் நடைமேடையில் உள்ள டீ கடையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென சிலிண்டா் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுமாா் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

மாநகராட்சி நடவடிக்கை: இந்நிலையில் தீ விபத்து நிகழ்ந்த கடைக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மேலப்பாளையம் மண்டலத்திற்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் உள்ள கடை எண்-59 இல் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பராமரிப்பின்றி கடையை நடத்தி தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்ததால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

ற்ஸ்ப்12ச்ண்ழ்ங்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் டீ கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை... மேலும் பார்க்க