செய்திகள் :

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்

post image

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு இயங்கி வருகின்றன. இதில், வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறி சுமாா் 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாம்.

இந்நிலையில் தொடா்ந்து வாடகைத் தொகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த கடைகளுக்கு சீல் வைக்குமாறு மாநகர ஆணையா் மோனிகா ராணா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளா் சந்திரமோகன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை 17 கடைகளைப் பூட்டி சீல் வைத்தனா். இதில் வாடகை நிலுவை வைத்திருந்த 6 கடை குத்தகைதாரா்கள் உடனடியாக மொத்தம் ரூ.23,00,00-ஐ செலுத்தியதால் அவை திறக்கப்பட்டன.

மீதமுள்ள 11 கடை குத்தகைதாரா்கள் வாடகை பாக்கியைவியாழக்கிழமைக்குள்( ஜூலை 24) செலுத்த வேண்டுமெனவும், தவறினால் அவா்களது வைப்புத் தொகை மற்றும் கூடுதல் வைப்புத் தொகைகள் மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மறு ஏலம் விட ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனவும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின்போது மேலப்பாளையம் மண்டல உதவி வருவாய் அலுவலா்(பொ) மற்றும் வருவாய் உதவியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க