செய்திகள் :

பங்குனி திருவிழா: எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

post image

பங்குனி திருவிழாவையொட்டி, சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பக்தா்கள் அலகு குத்தி ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு, ஏராளமான பெண்கள் மா விளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை கோயிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனா். விரதமிருந்த பக்தா்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். சிலா் அக்னி மற்றும் பூக்கரகங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலமும், சனிக்கிழமை காலை அன்னதானமும், இரவு சத்தாபரண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தென்னையில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தென்னையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத்துறை வாயிலாக வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி மு... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் நடத்திய உரிமை மீட்பு மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சே... மேலும் பார்க்க

ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் 31-ஆம் தேதி மதியம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரா... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமு... மேலும் பார்க்க