செய்திகள் :

பசு கடத்தல்: காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம்!

post image

ஒடிசா மாநிலம் சம்பால்பூர் மாவட்டத்தில் பசு கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பால்பூரிலிருந்து மேற்கு வங்கத்திற்கு இன்று (மார்ச் 11) காலை பசுக்களை ஏற்றி சென்ற வாகனத்தை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தின் பாதுகாப்பிற்காக அதனை பின் தொடர்ந்து வந்த மற்றொரு வாகனத்திலிருந்த நபர்கள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கேரளத்தில் கஞ்சா வைத்திருந்த 378 பேர் அதிரடி கைது!

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் கட்டுப்பாட்டில் புர்லாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு நாய்! உரிமையாளர் படுகாயம்!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வளர்ப்பு நாயால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார். டென்னிசி மாகணத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிர்க்வுட், இவர் தனது வீட்டில் ஓரியோ எனப் பெயர... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் புது தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 10 அன்று காவல் துறையினருக்கு கிடைத... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி! 13 பேர் படுகாயம்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சேனாபதி மாவட்டத்திலுள்ள சங்கோபங் கிராமத்தின் அருகில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் செ... மேலும் பார்க்க

அதிபரின் நன்கொடையால் வெடித்த மோதல்!

கென்யா நாட்டு அதிபர் தேவாலயத்திற்கு அளித்த நிதியுதவியினால் அந்நாட்டில் மோதல் வெடித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ அந்நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஜீசஸ் வின்னர் ... மேலும் பார்க்க

தெற்கு சூடானில் படைகளை இறக்கிய உகாண்டா!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் உகாண்டா நாட்டு படைகள் தரையிறக்கப்பட்டுள்ளதாக உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி கைனெருகபா தெரிவித்துள்ளார். தெற்கு சூடான் நாட்டு அதிபர் சால்வா கீர் மற்றும் அவரது... மேலும் பார்க்க

மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வேடமிட்டு லண்டன் செல்ல முயன்ற 8 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு சட்டவிரோதமாக லண்டன் செல்ல முயன்ற 8 பேர் மும்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்த... மேலும் பார்க்க