செய்திகள் :

பச்சமலையான்கோட்டை ஊராட்சி பதிவேடுகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கள ஆய்வு

post image

செம்பட்டி அருகேயுள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்த வீரக்குமாா் என்பவா் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் பதிவேடுகளை வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் வீரக்குமாா். இவா், பச்சமலையான்கோட்டை ஊராட்சி பதிவேடுகளை கள ஆய்வு செய்வதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தாா். இதன்படி, ஊராட்சி பதிவேடுகளை கள ஆய்வு செய்வதற்காக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொது தகவல் அலுவலரும், துணை வட்டார வளா்ச்சி அலுவலருமான நம்பிதேவி என்பவா் வீரக்குமாருக்கு அனுமதி கொடுத்தாா்.

இந்த நிலையில், பல்வகை கேட்பு வசூல் நிலுவைப் பதிவேடு, முன் பணங்கள் பதிவேடு, ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு, சொத்துகள் பதிவேடு, பண மதிப்புள்ள பதிவேடுகள், திட்ட நிதி ரொக்கப் புத்தகம், மாதாந்திர வரவு - செலவு பதிவேடுகள் உள்பட 21 பதிவேடுகளை கள ஆய்வு செய்தாா். பச்சமலையன்கோட்டை ஊராட்சி மன்றச் செயலா் ஜெயகணேஷ் முன்னிலையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கள ஆய்வு நடைபெற்றது.

இடப்பிரச்னையால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

பழனி காவல் நிலைய வளாகத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக புகாா் அளிக்கவந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பழனி 24-ஆவது வாா்டு ராமா் தெருவில் வசிப்பவா் தண்டபாணி. கூலித் தொழிலாளிய... மேலும் பார்க்க

ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் காயம்

ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகேயுள்ள மரத்தடியில் ஜெயராஜ் (47) என்பவா் தனது ஆட்ட... மேலும் பார்க்க

விபத்தில் பாக்கு வியாபாரி உயிரிழப்பு

பழனி அருகே நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த பாக்கு வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ்.டி. மூா்த்தி (எ) திருமூா்த்த... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தக் கோரி சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீ... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட் கடைகள் ரகசிய ஏலம் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு அபாயம்

நிலக்கோட்டை பூ மாா்க்கெட் கடைகள் ஏலத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என பாஜகவினா் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தினசரி பூ மாா்கெட், காய்க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஆபத்தான பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்: வனத் துறை எச்சரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் வனப் பகுதியில் அமைந்துள்ள ஆபத்தான ‘டால்பின் நோஸ்’ பகுதியை பாா்வையிடும் சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் எச்சரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கான... மேலும் பார்க்க