ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க தடை நீக்கம்
உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை தமிழக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு அமைந்துள்ள இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
மேலும், இங்கு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வமாக வருகின்றனா். குறிப்பாக இயற்கை மூலிகைகள் கலந்த தண்ணீா் இந்த அருவியில் கொட்டுவதால் இங்கு குளித்தால் நோய்கள் குணமாவதாக சுற்றுலாப் பயணிகள் நம்புகின்றனா். கோடையில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வந்ததால் பஞ்சலிங்கம் அருவியில் கடந்த 9 நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அருவிக்கு மிதமான தண்ணீா் வந்து கொண்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
இதைத் தொடா்ந்து பஞ்சலிங்கம் அருவிக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அனைவரும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிந்தனா்.