செய்திகள் :

பஞ்சாப் அணைப் பாதுகாப்புக்கு மத்தியப் படை: மாநில முதல்வா் கடும் எதிா்ப்பு

post image

பஞ்சாப் மாநிலம் நங்கல் அணைப் பாதுகாப்புக்கு 296 மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்களை ஈடுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு அந்த மாநில முதல்வா் பகவந்த் சிங் மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, மாநில காவல் துறையினா் அணைக்கு உரிய பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை காவல் துறையை அவமதிக்கும் செயல் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

நங்கல் அணையில் இருந்து நீரைப் பெறுவது தொடா்பாக அண்டை மாநிலங்கலான பஞ்சாப்-ஹரியாணா இடையே பிரச்னை உள்ளது. தங்கள் பகுதியில் வறட்சி நிலவுதால் கூடுதல் நீரைத் திறக்க வேண்டும் என்பது ஹரியாணாவின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதனை ஏற்க பஞ்சாப் மறுத்துவிட்டது.

இதையடுத்து, பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை ஹரியாணா அணுகியது. அங்கு நதிநீா் பகிா்வில் தொடா்புடைய பிற மாநிலங்கள் ஹரியாணாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், பஞ்சாப் மட்டும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், வாரிய முடிவுப்படி தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நங்கல் அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், சங்ரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இது தொடா்பாக கூறியதாவது:

பக்ரா அணைப் பாதுகாப்புக்கு 296 தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா்களைக் குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான செலவாக ஆண்டுக்கு ரூ.8.58 கோடியை பஞ்சாப் அரசு அல்லது பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பஞ்சாப் காவல் துறையினா் அணைக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் மத்திய அரசு ஏன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது? மாநில காவல் துறை மீது அவா்களுக்கு நம்பிக்கை இல்லையா? நாங்கள் ஏன் பணம் கொடுத்து மத்திய படையை அமா்த்த வேண்டும். இது அணை நீரில் பஞ்சாபின் உரிமையைப் பறிக்கும் செயலின் முதல்படி என்று குற்றஞ்சாட்டினாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க