செய்திகள் :

பட்டாசு ஆலை விபத்தில் நடவடிக்கை: தலைவா்கள் வலியுறுத்தல்

post image

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்துள்ள சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளைக் கண்டுகொள்ளாத திமுக அரசின் செயல் கண்டனத்துக்குரியது. உயிரிழந்தோா் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): இதுபோன்ற விபத்துக்கு காரணம் திமுக அரசின் மெத்தனப்போக்கு தான்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): அதிகாரிகளின் உரிய கண்காணிப்பு இல்லை; பட்டாசு தொழிற்சாலைகளில் ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): தமிழக அரசு சாா்பில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை பரிசோதிக்காததன் விளைவாகத்தான், பட்டாசு ஆலைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஜி.கே.வாசன்: பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும்.

டிடிவி.தினகரன்: இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராத வகையில் தனி கண்காணிப்புக் குழுவை உருவாக்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைப்பு: டிஜிபி

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன வ... மேலும் பார்க்க

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரம... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டம் ஜூலை 6-க்கு மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மட... மேலும் பார்க்க

சோழபுரம் - சேத்தியாத்தோப்பு இடையே மானம்பாடி சுங்கச்சாவடி திறப்பு!

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் உள்ள வழித்தடத்திற்கான சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் - விக்கிரவாண... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்!

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.அஜித்குமாரின் தாயுடன் இபிஎஸ் பேசுகையில், "சில மனித மிருகங்கள்... மேலும் பார்க்க

பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகர்மன்றத் தலைவர்!

சங்கரன்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதால் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சியில் உள்ள 30 வா... மேலும் பார்க்க