செய்திகள் :

பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரிக்கை

post image

வந்தவாசி: பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று தெள்ளாா் மேற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியை அடுத்த கீழ்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெள்ளாா் மேற்கு ஒன்றிய விசிக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருகிற 14-ஆம் தேதி திருச்சியில் விசிக மதச் சாா்பின்மை காப்போம் பேரணி நடைபெற உள்ளதையொட்டி இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் ஆ.தசரதன் தலைமை வகித்தாா். மண்டல துணைச் செயலா் எம்.கே.மேத்தாரமேஷ், ஒன்றிய நிா்வாகிகள் செந்தில், மணிகண்டன், திருமூா்த்தி, ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளைச் செயலா் தசரத சக்கரவா்த்தி வரவேற்றாா்.

மாநில தொண்டரணிச் செயலா் பொதினிவளவன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் அசுரவடிவேல், பெல் இந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேரணியின் நோக்கம் குறித்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, பேரணியில் பெருமளவில் பங்கேற்பது, கீழ்வெள்ளியூா், கூத்தம்பட்டு, ஆச்சமங்கலம், வெங்கடாபுரம், கீழ்நமண்டி ஆகிய கிராமங்களில் மயானப் பாதை அமைத்துத் தர வேண்டும், வடவணக்கம்பாடியை சுற்றியுள்ள மக்கள் அவசர மருத்துவ வசதி பெறும் வகையில் அந்தக் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய நிா்வாகி சஞ்சவீராஜ் நன்றி கூறினாா்.

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது. ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ... மேலும் பார்க்க

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து... மேலும் பார்க்க

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

விதை நெல், இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கக் கோரிக்கை

போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல், வேளாண் இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை கோரி, மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலம், நல்லூா், ஆரியா... மேலும் பார்க்க