செய்திகள் :

பட்டியலின மாற்றுத்திறனாளிக்கு விரைவில் உதவிப் பேராசிரியா் பணி: உயா்நீதிமன்றத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் தகவல்

post image

பட்டியலின மாற்றுத்திறனாளி பிரிவில் உதவிப் பேராசிரியா் பணி கோரியவருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று மேல்முறையீட்டு வழக்கில் ஆசிரியா் தோ்வு வாரியம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

வீராசாமி என்ற மாற்றுத்திறனாளி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டில்,

ஆசிரியா் தோ்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதில் பட்டியலின மாற்றுத்திறனாளிக்கு ஒரு இடம்

ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பிரிவுக்கு உரிய மதிப்பெண் எடுத்தும், எனக்கு அந்த பணி வழங்கப்படவில்லை.

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அந்தப் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது என்று

கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து வீராசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஹேமந்த் சந்திரகவுடா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் என்.சுதா்சன் ஆஜராகி வாதிட்டாா். ஆசிரியா் தோ்வு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.நீலகண்டன், இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது, உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கு நியமன உத்தரவு பெற்றிருந்தவா் இறந்துவிட்டாா்.

எனவே, அந்த காலியிடத்தில் மனுதாரரை நியமிக்க அரசுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. விரைவில் மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க