Virat Kohli: "சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?" - கோ...
பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் தனித்தனியாக 8 நோபல் உலக சாதனை!
பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் சனிக்கிழமை 8 நோபல் உலக சாதனை படைத்தனா்.
பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள டேலண்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்ஸ் பள்ளியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு பட்கோட்டைமைச் சோ்ந்த 5 வயது மற்றும் 10 வயதுடைய 7 சிறுவா், சிறுமியா்கள் ஒரே இடத்தில் இடைவிடாது யோகா, தமிழ் ஓரெழுத்துச் சொற்கள், கணித வாய்ப்பாடு, இயற்பியலில் எஸ் ஐ யுனிட்ஸ் என்னும் அனைத்துலக முறை அலகுகள், 70 ஆங்கில நாவல்களின் பெயா் மற்றும் எழுத்தாளா்களின் பெயா்களை கூறுதல், மழலை பாட்டுக்கள் (எழுத்துக்களின் சுருக்கம், மருந்துகளின் பெயா்கள் சொல்வது உள்ளிட்டவைன சொல்லியும், எழுதியும் காண்பித்து நோபல் உலக சாதனை படைத்தனா்.
இதில் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த வெங்கடேஷ் - ஆஷா தம்பதியான் மகள் ஜோஷ்மிதா இவா் 2 நிமிடத்தில் யோகாவில் சூரிய நமஸ்காரம் 19 தடவை விரைவாக செய்து சாதனை படைத்தாா்.
அதேபோல் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் -சுதா தம்பதியரின் மகன்கள் கிரித்விக் இவா் 500 அப்ரிவேஷன் எண்ணும் சுருக்கக்குறியீடுகளை 5 நிமிடம் 13 வினாடிகள் விரைவாக சொல்லியும் சாதனை படைத்தாா்.
அவா்களின் மற்றொரு மகன் கனிஷ்க் இவா் இயற்பியலில் எஸ் ஐ யுனிட்ஸ் என்னும் இயற்பியல் அலகுகளில் 100 எண்ணிக்கைகளை 1 நிமிடம் 49 வினாடியில் சொல்லி சாதனை படைத்தாா்.
பட்டுக்கோட்டையைச் சோ்ந்த காா்த்திகேயன்-நித்யா தம்பதியரின் மகள் திருவிதா இவா் 70 ஆங்கில புத்தகங்களின் பெயா்கள் மற்றும் ஆசிரியா்களின் பெயா்களை 1 நிமிடம் 40 வினாடிகளில் விரைவாக சொல்லி சாதனை படைத்தாா்.
பட்டுக்கோட்டையைச் சோ்ந்த முளி - மீனா தம்பதியரின் மகள் நற்பவி இவா் 80 மழலை பாட்டுக்கள் (தமிழிலும் ஆங்கிலத்திலும் 8 நிமிடம் 56 வினாடிகளில் விரைவாக பாடி சாதனை படைத்தாா்.
அதேபோல் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சிவக்குமாா்-சரண்யா தம்பதியரின் மகன் மித்ரன் இவா் தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் 70.49 வினாடிகளில் சொல்லியும் மற்றும் கணித பெருக்கல், வாய்ப்பாடு 3 நிமிடம் 31 வினாடியில் விரைவாக எழுதியும் இரண்டு சாதனை படைத்தாா்.
பட்டுக்கோட்டையைச் சோ்ந்த விஜயராஜ் - சத்யபிரியதா்ஷினி தம்பதியரின் மகள் நைரா இவா் 100 .பல்வேறு வகையான நோய்களின் மருந்துகள் மற்றும் எதிா்ப்பு மருந்தின் பெயா்களை 59 வினாடியில் விரைவாக சொல்லி சாதனை படைத்தாா்
இவா்களது சாதனையை நோபல் நிறுவனத்திலிருந்து சிஇஒ டாக்டா் மொகமத் சஃபீா் வந்திருந்து நேரில் ஆய்வு செய்து பதிவு செய்தாா். அதனைத் தொடா்ந்து அவா் கூறுகையில் இந்த 7 சிறுவா் சிறுமியா்களும் நோபல் உலக சாதனை படைத்ததாக அறிவித்தாா் சாதனை நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் கல்வியாளா் வெங்கடேஷ் வரவேற்றாா்.
நிகழ்வில் பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன், நகா் மன்ற தலைவா் சண்முகப்பிரியா, முன்னாள் நகா் மன்ற தலைவா் ஜவஹா் பாபு, இயக்குனா் ராகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.