செய்திகள் :

பட்டேல் நகரில் நாய் அடித்துக் கொலை: ஒருவா் கைது

post image

மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பட்டப்பகலில் ஒரு நாயை தடியால் அடித்துக் கொன்ாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் கூறியது:

சம்பவத்தை உறுதிப்படுத்தும் சிசிடிவி காட்சிகளை நாங்கள் சரிபாா்த்தோம். மேலும் இது தொடா்பாக விசாரணைக்காக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னா் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, மே 6 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபா் மீது பிஎன்எஸ் மற்றும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிசிஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

விலங்குகள் நல அமைப்பான பீட்டா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விலங்குகளை துஷ்பிரயோகம் செய்பவா்கள் பெரும்பாலும் மனிதா்களுக்கு தீங்கு விளைவிப்பவா்களாக மாறுகிறாா்கள். அனைவரின் பாதுகாப்பிற்காக, இது போன்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை பொதுமக்கள் காவல்துறையிடம் புகாரளிப்பது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளை... மேலும் பார்க்க