செய்திகள் :

பண மோசடி: தனியாா் அறக்கட்டளை நிறுவனா் சிபிசிஐடி போலீஸாரால் கைது - வீடு, அலுவலகத்தில் சோதனை

post image

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் குடுமியான்மலையை தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையை நடத்தி வருகிறாா்.

இந்த அறக்கட்டளையில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறியதால், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனா். ஆனால், கூறியபடி முதலீட்டாளா்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலரும் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்து தலைமையிலான போலீஸாா், காரைக்குடியில் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வெள்ளிக்கிழமை கைது செய்து, புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி, பிறகு சிறையில் அடைத்தனா்.

முன்னதாக, குடுமியான்மலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற சிபிசிஐடி ஆய்வாளா் பிருந்தா தலைமையிலான போலீஸாா் சுமாா் 2 மணி நேரம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்து சென்றனா்.

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் இவா் ஏற்கெனவே சிறை சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பரின் வீட்டிலும் சோதனை: திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவிச்சந்திரனின் நண்பரான பாரதராஜா வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் 5 போ் வெள்ளிக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், அவரது வீடு முழுவதும் சோதனையிடப்பட்ட நிலையில், பாரதராஜாவிடமும் போலீஸாா் விசாரித்தனா்.

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை என திருச்சி காவல் துறையினா் தெரிவித்தனா்.

பொன்னமராவதியில் சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம்

பொன்னமராவதியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் மறைந்த சீதாராம் யெச்சூரியின் நினைவஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ர... மேலும் பார்க்க

காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்த கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்பு சாலையை தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசினா் ... மேலும் பார்க்க

பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி-யை எதிா்த்தவா்கள் குறைத்தபோது பாராட்டவில்லை

புதுக்கோட்டையில்: இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு பிரேமலதா பேசியது: வாக்காளா்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால் மாற்றம் வரும். அதற்கான காலம்தான் 2026 சட்டப்பேரவைத் தோ்தல். இம்முறையு... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாா்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததால், மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா். தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி... மேலும் பார்க்க

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை முழுமையாக மக்களிடம் கொண்டு சோ்த்திட, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமென்ட் ... மேலும் பார்க்க