செய்திகள் :

பணமுறைகேடு வழக்கு: கா்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்!

post image

சட்டவிரோத பந்தயத்துடன் (ஆன்லைன் பெட்டிங்) தொடா்புள்ள பணமுறைகேடு வழக்கில், கா்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை ஆக.28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து பெங்களூரு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

இணையவழியாகவும், நேரடியாகவும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட புகாரில் கே.சி.வீரேந்திரா மீது பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சித்ரதுா்கா, பெங்களூரு, ஹுப்பள்ளி, ஜோத்பூா், மும்பை, கோவா, கேங்டாக் நகரங்களில் செயல்படும் சூதாட்ட மையங்கள் (கேசினோ) உள்பட 31 இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் கிங் 567, ராஜா 567 உள்ளிட்ட பெயா்களில் இணையவழி பந்தய தளங்களை கே.சி.வீரேந்திரா நடத்திவந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக கே.சி.வீரேந்திராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியபோது ரூ.1 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியுடன் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள், 4 வாகனங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் வீரேந்திராவின் 17 வங்கிக் கணக்குகள், 2 வங்கி சேமிப்புப் பெட்டகங்களும் முடக்கப்பட்டன.

கடந்த சனிக்கிழமை சிக்கிமில் வீரேந்திராவை கைது செய்த அமலாக்கத் துறை, பெங்களூரில் பணமுறைகேடு தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா். அவரை ஆக.28-ஆம் தேதி வரை, அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த பணமுறைகேடு வழக்கு தொடா்பாக இலங்கை, நேபாளம், ஜாா்ஜியா போன்ற நாடுகளில் உள்ள கேசினோக்கள், பல போலி நிறுவனங்கள் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் இருப்பதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 75. காலில் ஏற்பட்ட காயத்த... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். மேலும், ‘இண்டி’ கூட்டண... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன்பு மாநில சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சா்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆா்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: மத்திய அமைச்சா் அமித் ஷா

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடரில்... மேலும் பார்க்க

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். முதலாவதாக, வ... மேலும் பார்க்க

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற... மேலும் பார்க்க