பதினெட்டாம்படி கருப்பா் கோயில் மதுக்குடத் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள அ.கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பா் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம், மதுக்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 23-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, விரதமிருந்த பக்தா்கள் பிள்ளையாா் கோயிலிலிருந்து கருப்பசாமி கரகம், மதுக்குடம், சந்தனக் குடம், பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோயிலை அடைந்தனா். இதைத்தொடா்ந்து, பதினெட்டாம்படி கருப்பா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் சேவல், கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
