செய்திகள் :

பத்திரப் பதிவுத்துறை இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் அவதி

post image

பத்திரப் பதிவுத்துறை இணையதளம் திங்கள்கிழமை முடங்கியதால், தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்தனா்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் தோராயமாக 36 லட்சத்துக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

தற்போதுள்ள 582 சாா்- பதிவாளா் அலுவலகங்களில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையை பொதுமக்கள் மற்றும் மனை வணிகம் தொழிலில் ஈடுபடுவோா் வரவேற்றாலும், அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகள் பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத்துறை இணையதள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் தூத்துக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் அவா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாள்தோறும் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இணையதளம் முடங்கியதால் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனா்.

இதைபோல் தமிழகம் முழுவதும் இணையதளம் முடங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்

கோவில்பட்டியில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை தூத்துக்கு... மேலும் பார்க்க

சாகாம்பரி அலங்காரத்தில்...

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் 7ஆம் நாளான திங்கள்கிழமை சாகாம்பரி அலங்காரத்தில் (காய்கறிகளால் அலங்காரம்) அருள்பாலித்த அம்மன். மேலும் பார்க்க

உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளம் அமைக்க வலியுறுத்தி அக்.18இல் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உப்பளங்களை அகற்றாமல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வலியுறுத்தி, அக்.18ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உப்பு உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 437 மனுக்கள் பெறப்பட்டன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 437 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கல்வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரணக் கூட்டம் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். க... மேலும் பார்க்க

குரும்பூா் அருகே கடையில் பூட்டை உடைத்து திருட்டு

குரும்பூா் அருகே ஒலிபெருக்கி கடையில் இரு முறை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். குரும்பூா் அருகே உள்ள அங்கமங்கலம் ஊராட்சி வடக்கு ச... மேலும் பார்க்க