செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடாது: வே. நாராயணசாமி

post image

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடாது என புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த மாதம் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் காஷ்மீரில் பயிற்சி பெற்றவா்கள் என்பது தெரியவந்தது. காஷ்மீரில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டதாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தெரிவித்தனா். இதை நம்பியே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குச் சென்றனா்.

இந்த நிலையில்தான் பஹல்காமில் இந்தக் கொடூர நிகழ்வு நடைபெற்றது. பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு உளவுத் துறை தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல் துறை, ராணுவத்தினா் இல்லை என்பது வேதனைக்குரியது.

தாஜ் ஹோட்டலில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அப்போதைய பிரதமரை விமா்சித்துப் பேசினாா். ஆனால், இதுபோன்று எந்த விமா்சனங்களையும் முன்வைக்காமல், தீவிரவாதத்தை அழிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் உறுதிப்பட ஆதரிப்போம் என காங்கிரஸ் கட்சி தேசப்பற்றின் காரணமாக அறிவித்தது.

பயங்கரவாத ஒழிப்புக்கு 90 சதவீத உலக நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக உள்ளன. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாதத்தை முழுவதுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத ஒழிப்புக்கு எப்போதும் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். இதில் எந்தவித அரசியல் ஆதாயமும் காங்கிரஸ் தேடாது. இதேபோல, பயங்கரவாத ஒழிப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு அறையில் ஊராட்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேலூா் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்தவா் மதிவாணன் (45). இவா் வெள்ளரிப்பட்டியில்... மேலும் பார்க்க

புதிய குடிநீா்த் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டியை மாநில தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பல்லவன், பாலருவி ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை - காரைக்குடி- ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான அா்ச்சகா் கோயில் பூஜைகளில் ஈடுபடக் கூடாது: உயா்நீதிமன்றம்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை, புகாருக்கு உள்ளான அா்ச்சகா் எந்த வித பூஜையிலும் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. காரைக்குடி கொ... மேலும் பார்க்க

மதுரையில் மே 16-இல் இந்திய-ரஷிய பல்கலைக்கழக கல்விக் கண்காட்சி

மதுரையில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து வோல்கோ கிராப்ட் மாநிலப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நடல்ய அல்சுக், சென்னை ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல... மேலும் பார்க்க