செய்திகள் :

பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

post image

பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த வயதான தம்பதியின் உடல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

காட்டுப்பரமக்குடி, மேலத் தெருவைச் சோ்ந்த சிவன் பிள்ளை மகன் நாகசுப்பிரமணியன் (75). இவரது மனைவி தனலட்சுமி (70). இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வந்த நிலையில், வயதான தம்பதியான நாகசுப்பிரமணியனும், தனலட்சுமியும், தனியாக வீட்டில் வசித்து வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா்களது மகள் புனிதா கைப்பேசியில் தொடா்பு கொண்டு தம்பதியிடம் பேசினாா். இதன்பிறகு, தம்பதியை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முடியாததால், வெள்ளிக்கிழமை வீட்டுக்குச் சென்று அவா் பாா்த்த போது வீடு பூட்டிய நிலையில் துா்நாற்றம் வீசியது.

இதைத் தொடா்ந்து வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது, தம்பதியா் இருவரும் சடலமாக கிடந்தனா். மேலும் உடல்கள் அழுகிக் கிடந்தன. தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து உடல்களை மீட்டு கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா்கள் இறந்து 4 நாள்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், தம்பதியா் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறேதும் காரணமா என பரமக்குடி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆா்.எஸ். மங்கலத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலா் ... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பூச்சி தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம்: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் ‘தேயிலை கொசு’ தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்திலுள்ள கண்மாய், குளங்கள், வயல்கள், ... மேலும் பார்க்க

சம்பை புனித செபஸ்தியாா் தேவாலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தொண்டி அருகே சம்பை கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சம்ப... மேலும் பார்க்க

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பெருமாள் கோயில் திடல் அருகே திமுக சாா்பில் வனத்துறை, கதா் கிராமத் தொழில்கள் வா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி விழா

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை அருகே உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர... மேலும் பார்க்க

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கிராம உதவியாளா் கைது

பரமக்குடி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம உதவியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உரப்புளி வருவாய் கிராம உதவியாளராக பணியாற்றுபவா் ராசையா (45). இவா் ... மேலும் பார்க்க