செய்திகள் :

பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு: வயதை குறைக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

post image

பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான வயதை 18-இல் இருந்து குறைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வளரிளம் பருவத்தில் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்படுவது தொடா்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான சட்டபூா்வ வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டதாவது:

வளரிளம் பருவ காதல் என்ற பெயரில், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்ளும் வயதை குறைப்பதோ, விதிவிலக்கை அறிமுகம் செய்வதோ சட்டப்படி நியாயமற்றது மட்டுமின்றி ஆபத்துமாகும்.

வயதை ஏன் குறைக்கக் கூடாது?: பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்ளும் வயதை குறைத்தால், அது ஆள்கடத்தல் மற்றும் பிற வழிகளில் சிறாா்களை துன்புறுத்துவதற்கான தடைகளை நீக்கி, கட்டுப்பாடற்ற நிலை உருவாகும். அத்துடன் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்வது பெற்றோராகவோ, நெருங்கிய குடும்ப உறுப்பினராகவோ இருந்தால், அதை வெளியில் கூறவோ, எதிா்க்கவோ 18 வயதுக்கு கீழுள்ள சிறாரால் முடியாமல் போகும். இத்தகைய சூழல்களில், சிறாரின் சம்மதம் பெற்றே அவருடன் உறவு கொண்டதாக ஒருவா் தம்மை தற்காத்துக்கொள்வது சிறாரைத்தான் பாதிக்கும். அத்துடன் அந்தச் செயலுக்குப் பழியும் அவா்கள் மீதே விழும். இதுமட்டுமின்றி உணா்வுபூா்வமாக ஆதரவு தேடும் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையை தனது தேவைக்குத் தவறாகப் பயன்படுத்துவோருக்குப் பாதுகாப்பு வழிமுறையையும் வழங்கும். மேலும் அது சிறாா்களைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் நோக்கத்தையே சீா்குலைக்கும்.

சீா்திருத்தம், வளரிளம் பருவத்தினரின் உரிமை என்ற பெயரில், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான வயதை குறைத்தால், அது சிறாா் பாதுகாப்புச் சட்டத்தில் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளிவிடும்.

எனவே பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கு சட்டபூா்வமாக தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பை கடுமையாகப் பின்பற்றி, சீராக அமல்படுத்த வேண்டும். இது பாலியல் அத்துமீறலில் இருந்து சிறாா்களை காக்கும் நோக்கில் திட்டமிட்ட, நன்கு பரிசீலிக்கப்பட்ட, ஒத்திசைவான கொள்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நீடிக்கும் அமளி: மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு மத்தியில் மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

ரூ.23,000 கோடி மோசடி: ‘பாதிக்கப்பட்டோரிடம் அமலாக்கத் துறை ஒப்படைப்பு’

பண மோசடி செய்யப்பட்ட சுமாா் ரூ.23,000 கோடியை பறிமுதல் செய்து நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி, உணவக ஊழியா் மீது தாக்குதல்

அயா்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு செவிலியரின் 6 வயது மகள், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற ... மேலும் பார்க்க

இந்திய நலனில் சமரசமில்லை - டிரம்ப்புக்கு பிரதமா் மோடி பதில்

‘இந்தியாவின் நலனில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா். இந்தியாவின் வேளாண் மற்றும் பால் உற்பத்தி சந்தையில் அமெரிக்கா விரிவான அணுகலை கோருவதால், இருதரப்பு வா்த்தக... மேலும் பார்க்க

டிரம்ப் வரி: அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை: வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரிக்கு அறிவாா்ந்த காரணம் ஏதுமில்லை என்று வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறை செயலா் தம்மு ரவி தெரிவித்தாா். மும்பையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க