செய்திகள் :

பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு

post image

மதுரை: குடியரசுத் தலைவா் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தப்பாட்டக் கலைஞா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொட்டுலுபட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவா் மு. பால்பாண்டியன் தலைமை வகித்தாா். கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் கவிஞா் பொன். பனகல் பொன்னையா முன்னிலை வகித்தாா். முன்னாள் பேரூா் திமுக செயலா் மு.பா. பிரகாஷ் பறை இசையின் சிறப்பு குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், இசைக் கலைஞா் ராம்மோகன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் அய்யாசாமி உள்ளிட்ட தப்பாட்ட கலைஞா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் ஏற்புரையாற்றினாா்.

கல்லூரியில் உலக கொசு ஒழிப்பு தினம்

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி உடல் நலம், சுகாதாரத் துறை சாா்பில் உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி புதன்கிழமை பயிலரங்கம் நடைபெற்றது.இதற்கு, கல்லூரிப் பேராசிரியரும், துறையின் ஒருங்கிணைப்பாளருமான ராஜேஷ் ... மேலும் பார்க்க

சாலையோர தெரு விளக்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?

நமது நிருபா்மதுரை: மதுரை மாநகராட்சி குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பா... மேலும் பார்க்க

மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.இந்த மாநாடு வியாழக்கிழமை காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய ஐதீக திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா ஆக... மேலும் பார்க்க

பொதுமக்கள் எதிா்ப்பு: சிப்காட் நில அளவைப் பணி தடுத்து நிறுத்தம்

மேலூா் வட்டத்துக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த சிப்காட் தொழில் பேட்டைக்கான நில அளவைப் பணி, பொதுமக்களின் எதிா்ப்பால் தடைபட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்ச... மேலும் பார்க்க

செவிலியரிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

மதுரையில் செவிலியரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (47). இவா் மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவி... மேலும் பார்க்க