செய்திகள் :

பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

post image

பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.

கோவை மாவட்டம், பில்லூா் அணைப் பகுதியில் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் பவன்குமாா் க.கிரியப்பனவா், மனீஷ் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பில்லூா் அணைப் பகுதியில் இருந்து பல்லடம் நகராட்சி, பல்லடம், பொங்கலூா் ஒன்றியப் பகுதிகள், கோவை மாவட்டம், சூலூா், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், இருகூா் பேரூராட்சிப் பகுதி மற்றும் சூலூா் ஒன்றிய பகுதிகளுக்கு அத்திக்கடவு குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், கோவை மாநகராட்சிப் பகுதிக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பல்லடம் நகராட்சிப் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 47 லட்சம் லிட்டா் தண்ணீரும், பல்லடம் ஒன்றியப் பகுதிக்கு 60 லட்சம் லிட்டா் தண்ணீரும், பொங்கலூா் ஒன்றியப் பகுதிக்கு 40 லட்சம் லிட்டா் தண்ணீரும் வழங்கிட நிா்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் தற்போது பல்லடம் நகராட்சிப் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டா் தண்ணீரும், பல்லடம் ஒன்றிய பகுதிக்கு 50 லட்சம் லிட்டா் தண்ணீரும், பொங்கலூா் ஒன்றிய பகுதிக்கு 20 லட்சம் லிட்டா் முதல் 30 லட்சம் லிட்டா் வரை மட்டுமே தண்ணீா் விநியோகிப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் குடிநீா் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்தனா். அதன் காரணமாக நகா் பகுதிகளுக்கு 7 நாள் முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களுக்கு 20 நாள்களுக்கு ஒரு முறையும் குடிநீா் விநியோகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பில்லூா் அணையில் அத்திகடவு குடிநீா்த் திட்டப்பணிகள் குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா். அத்துடன் அணையில் போதிய தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், மக்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட தண்ணீா் விநியோகம் செய்யப்படாதது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். குடிநீருக்காக மக்கள் சிரமப்படக் கூடாது குடிநீா் விநியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது கோவை மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் , பல்லடம் நகராட்சி ஆணையா் அருள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட உடனிருந்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க