செய்திகள் :

பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 50 அடி பள்ளத்தில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் பொன்னுமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அனுப் (35). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பால் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு பகுதியிலிருந்து டேங்கா் லாரியில் பால் ஏற்றிவிட்டு கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றாா்.

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூா் மரப்பாலத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோர 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி இடிபாடுகளுக்குள் அனுப் சிக்கினாா்.

தகவலறிந்ததும் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளா் பச்சைமால் உள்பட போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று கிரேன் மூலம் பள்ளத்தில் விழுந்த லாரியை மீட்டனா். லாரிக்குள் அனுப் உயிரிழந்து சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, விசாரணை நடத்தினாா்.

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கைவிட கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

குமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி குறும்பனையில் மீனவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கா... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (44). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி ஷோபா, இரண்டு ஆண் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க

இரணியல் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 12ஆம் வகுப்பு மாணவா்-மாணவியருடன் அவா் கலந்து... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிய 2 பைக் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சிறுவா்கள் ஓட்டிய 2 விலையுயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, சிறுவா்களின் தந்தை மீது வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகன தணிக்கை... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

களியக்காவிளை அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடமிருந்து 5 பவுன் தங்க நகையை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா். நித்திரவிளை அருகே உள்ள பொன்னுருக்கி வீட்டைச் சோ்ந்தவா் தங்கப்பன் மனைவி லீலாபாய் (77). இவா், ... மேலும் பார்க்க

ஆவணி 2ஆவது ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆவணி 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். நாகதோஷம் நீக்கும் பரிகார தலங்களுள் ஒன்றாக நாகா்கோவில் நாகராஜா கோயில் திகழ்கிறது.... மேலும் பார்க்க