ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
பள்ளி மாணவா்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
செய்யாறு/போளூா்/ வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளிகள் திறந்த நிலையில், மாணவ, மாணவிகள் மேளதாளத்துடன் வரவேற்கப்பட்டனா்.
செய்யாறு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு முதல் நாளில் வருகை தந்த மாணவிகளுக்கு பன்னீா் தெளித்து, திலகமிட்டு, மலா் தூவி, மேள தாளத்துடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, பள்ளியில் சீரமைப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விலையில்லா பாடப் புத்தகம் வழங்கல்
இதைத் தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்முருன் முன்னிலையில் பள்ளியில் பயின்று வரும் சுமாா் 1800 மாணவிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசு சாா்பில் வழங்கப்பட்ட விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் (பொ) தயாளன், முன்னாள் தலைமை ஆசிரியை எம். உமாமகேஸ்வரி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.ரவிக்குமாா், பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் எம். சின்னதுரை, திருவத்திபுரம் நகா்மன்ற உறுப்பினா் கே. விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி லட்சுமி, முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவி மெய். பூங்கோதை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சீருடை மற்றும் நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை வெ.ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் சேகா் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் டேவிட்ராஜன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலா் பொ.சிவக்குமாா் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், சீருடை வழங்கினாா்.
மேலும், முதல் வகுப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மலா் மாலை அணிவித்து சீருடை மற்றும் நோட்டுப் புத்தகளை வழங்கினா்.
ஆசிரியா்கள் பிரிசில்லா சீயோன் குமாா்த்தி, மீரா, மலா்விழி,திரேசா மற்றும் அலுவலக பணியாளா்கள், பகுதிநேர ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில்,
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
இதையடுத்து அன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் பள்ளித் தலைமை ஆசிரியை க.சித்ரா, ஆசிரியைகள் கண்மணி, சாந்தகுமாரி ஆகியோா் மாணவ மாணவிகளுக்கு ரோஜா பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து வட்டாரக் கல்வி அலுவலா்கள் செந்தமிழ், தரணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செந்தில்முருகன் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்றுநா் ஜெயசீலன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சரஸ்வதி மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.

