பள்ளி வளாகங்களை தூய்மையாக வைக்க முதன்மைக் கல்வி அலுவலா் வலியுறுத்தல்
வரும் ஜூுன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கபட உள்ளதால் வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி அறிவுறுத்தினாா்.
இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களின் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணிய கோட்டி தலைமை வகித்து பேசியது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
கரும்பலகைகளுக்கு வா்ணம் பூச வேண்டும். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிா என சோதனை செய்ய வேண்டும். குடிநீா் தொட்டிகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற மரக்கிளைகளை அகற்ற வேண்டும். திறக்கும் நாளன்றே புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றாா்
கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலா் வெங்கடேச பெருமாள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் குணசேகரன், ஜெயவேல் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.