அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
திருச்சி அருகே பெல் வளாக குடியிருப்பில் வெள்ளிக்கிழமை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் கில்ஸ்டன் ஆபிரகாம். இவா் பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறாா். இவரது மனைவி மொ்லின் மேத்யூ. இந்திரா கணேசன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா்கள் குடும்பத்துடன் பெல் நிறுவன வளாக குடியிருப்பில் வசித்து வருகின்றனா். இந்தத் தம்பதிக்கு எய்டன் (5), எரிக் (18 மாதங்கள்) என இரு மகன்கள்.
மூத்த மகன் எய்டன், காட்டூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். பெற்றோா்கள் இருவரும் பணிக்குச் செல்வதால் வீட்டில் வசந்தா என்ற பணிப் பெண், குழந்தைகளை கவனித்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை காலை பள்ளி வேன் வீட்டின் முன்பு வந்தபோது, பணிப்பெண் வசந்தா, எய்டனை வேனில் ஏற்றி விட சென்றுள்ளாா். அப்போது, ஒன்றரை வயது குழந்தையான எரிக், வீட்டிலிருந்து கதவை திறந்து ஓடி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராத விதமாக வேன் புறப்படவே, எரிக் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் உதவியுடன் படுகாயமடைந்த குழந்தையை வசந்தா மீட்டு சிகிச்சைக்காக பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை எரிக் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெல் போலீஸாா், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து பள்ளி வேன் ஓட்டுநா் சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.