செய்திகள் :

பள்ளிக்கூடங்களின் அலட்சியம், கொல்லப்படும் பிஞ்சுகள், தாளாளர்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் குற்றவாளியே!

post image

பள்ளிக்கூட தொழிலதிபர்களின் அலட்சியத்தால், கவனக்குறைவால், ஆள்வோர்கள் மற்றும் அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் வெறியால் பள்ளிக்கூட வளாகங்களில் குழந்தைகளின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. சமீபத்திய பலி... மதுரை, மழலையர் பள்ளிக்கூடத்தின் நான்கு வயது பிஞ்சு.

அந்தப் பள்ளிக்கூட வளாகத்திலிருந்த எட்டு அடி ஆழமுள்ள தண்ணீர்த் தொட்டி மூடப்படாமல் இருந்துள்ளது. குழந்தை, அந்தப் பகுதிக்குச் சென்றதையும் பணியில் இருந்த ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள் யாருமே கவனிக்கவில்லை. ஆக, முழுக்க முழுக்க இது அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலையே!

பள்ளிக்கூட தாளாளர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என ஏழு பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த வளாகத்தில் சில விதிமீறல்கள் இருப்பதும், அதுவும் இப்போதுதான் தெரியவந்ததால், பள்ளிக்கூடத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

இது, முதல் இழப்பு இல்லை என்பது, கோபத்தின் வெப்பத்தை அதிகரிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம், தனியார் ஆரம்பப் பள்ளிக்கூட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அப்போதே, பள்ளிக்கூட வளாகங்களின் பாதுகாப்புக் குறித்துக் கமிட்டியெல்லாம் போட்டு, அறிக்கையெல்லாம் வாங்கி ஏதேதோ செய்தது அரசு. ஆனால், சென்னை, முடிச்சூரில் தனியார் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து குழந்தை பலி; விக்கிரவாண்டி தனியார் பள்ளிக்கூட கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு... இன்று வரையிலும் கொடூரங்கள் தொடர்கின்றன.

தனியார் மற்றும் அரசுப் பள்ளிக்கூடங்களில் சீரான இடைவெளிகளில் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பள்ளிக் கல்வித்துறை; கட்டடங்களுக்கு அனுமதி கொடுக்கும் நகர்ப்புற திட்டமிடல்துறை; பள்ளிக்கூட வாகனங்களுக்கு அனுமதி கொடுக்கும் போக்குவரத்துத்துறை இவர்களை யெல்லாம் கண்காணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் என... அனைத்து இடங்களிலும் லஞ்சம்... லஞ்சம்... லஞ்சமே. எதிர்விளைவாக, குழந்தைகளின் பாதுகாப்பு... கோப்புகளில் மட்டுமே ‘சரி’ செய்யப்படுகின்றன.

கல்விக்கூட வளாகங்களை, பயிலும் குழந்தைகளின் உயிருக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தவறும் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின் பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குற்றவாளிகளே. தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதேசமயம், இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கு தூண்டிய அல்லது உடந்தையாக இருக்கும் கல்வித்துறை, கட்டட அனுமதித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் என அத்தனை பேருமே குற்றவாளிகள்தான். இவர்களையும் தப்பவிடக் கூடாது. அதற்கு தகுந்தாற்போல.. முதல் தகவல் அறிக்கை தொடங்கி, நீதிமன்றம் வரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள்... மதுரை மழலையர் பள்ளியில் நடந்திருக்கும் இந்தக் கொடூரக் கொலையிலிருந்தே துவக்கப்பட வேண்டும்.

உரக்கக் குரல் கொடுப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம்" - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறி... மேலும் பார்க்க

திருச்சி: பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் டிரோன் காட்சிகள்!

திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச... மேலும் பார்க்க

அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய உத்தரவுகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெ... மேலும் பார்க்க

பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற தமிழக அரசு; `உயிருக்கு அச்சுறுத்தல்' என நீதிமன்றத்தில் ஆஜராகாத சகாயம்!

மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட... மேலும் பார்க்க

போர் பதற்றம், வான்வழி மூடல்... Air India நிறுவனத்தின் செலவீனங்கள் ரூ.5000 கோடி அதிகரிப்பு?

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான் வழியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் பெறும் நட்டத்தைச் சந்தி... மேலும் பார்க்க

பதிவாளர் அலுவலக கழிவறையில் ரூ.3 லட்சம்; லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பறிமுதல்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நஞ்சியம்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உமா மகேஷ்வரி என்பவர் சார் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முறை... மேலும் பார்க்க