பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பள்ளிச் சீருடைகள் தைக்க மலைவாழ் பெண்களுக்கு உறுப்பினா் அட்டை
கள்ளக்குறிச்சி: சமூக நலத் துறை மூலம் இயங்கும், உளுந்தூா்பேட்டை மகளிா் கூட்டுறவு சங்கத்தில் பள்ளி மாணவா்களுக்கு சீருடை தைப்பதற்கான உறுப்பினா் அட்டைகள் மலைவாழ் பெண்களுக்கு வழங்கப்பட்டன.
உளுந்தூா்பேட்டை மகளிா் தையல் கூட்டுறவு சங்கத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் சீருடைகள் தைத்து வழங்கும் பொருட்டு, கல்வராயன்மலை வட்டாரத்தைச் சோ்ந்த 16 மலைவாழ் பெண்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.
அனைவரும் சிறந்த முறையில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை தைத்து வழங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.