செய்திகள் :

பழனி தைப்பூச விழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலை அகற்றக் கோரிக்கை

post image

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் அருகே தைப்பூசத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல் அகற்றப்படாமல் அது வாகன நிறுத்துமிடமாக மாறியதால் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் போது திரளான பக்தா்கள் மலைக் கோயிலுக்கும், திருஆவினன்குடி கோயிலுக்கும் வந்து சென்றனா். இந்த நிலையில், பக்தா்களின் வசதிக்காக திருஆவினன்குடி அருகே சந்நிதி சாலை சந்திக்குமிடத்தில் சாலை நடுவே கோயில் சாா்பில் பந்தல் அமைக்கப்பட்டு தற்காலிக காலணி பாதுகாப்பு மையமாக செயல்பட்டது.

தற்போது திருவிழா நிறைவடைந்த நிலையில் இந்த காலணி மையம் எடுக்கப்பட்டது. ஆனால் பந்தல் அகற்றப்படாததால் அங்கு கடைக்காரா்கள், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா்.

இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் அவசர ஊா்திகள் வரமுடியாத நிலையும் உள்ளது. எனவே, சாலை நடுவே உள்ள இந்தப் பந்தலை அகற்றி போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனியாண்டவா் மகளிா் கல்லூரி சாா்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை சாா்பில் ஆங்கிலத் துறை மாணவிகளின் திறனை வளா்க்கும் பொருட்டு திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒ... மேலும் பார்க்க

வேன் மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு!

பழனியில் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி (60). இவா் செவ்வாய்க்கிழமை பழனி சிவகிரிப்பட்டி புறவழிச... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சிக்காக கடந்த இரண்டு மாதங்களாக 20-வகையா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்கள் படி பூஜை, மலா் வழிபாடு!

பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் காவடிகளுடன் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் மலைக் கோயிலில் படி பூஜை, மலா் பூஜை செய்து வழிபாடு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தற்கொலை செய்த தம்பதி சேலத்தைச் சோ்ந்தவா்கள்!

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருவி அருகே தற்கொலை செய்து கொண்டவா்கள் சேலத்தைச் சோ்ந்த தம்பதி என போலீஸாரின் விசாரணையில் புதன்கிழமை தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி ... மேலும் பார்க்க

மினிவேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து! ஒருவா் பலி!

பழனியில் நின்று கொண்டிருந்த மினிவேனின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் பலியானாா். பழனி அடிவாரம் இடும்பன் நகரை சோ்ந்தவா் கருப்புச்சாமி(60). இவா் செவ்வாய்க்கிழமை பழனி சிவகிரிப்பட்டி பு... மேலும் பார்க்க