செய்திகள் :

பழனியிலிருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை தொடக்கம்

post image

பழனியிலிருந்து திருப்பதிக்கு தினமும் இயங்கும் வகையில் ஆந்திர மாநில அரசுப் பேருந்து சேவை சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

பழனியிலிருந்து திருப்பதி திருமலைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு அனுப்பும் பொருள்களுக்கு கட்டணம் கிடையாது. சிறப்பாக இயங்கி வந்த இந்தப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிக்கு வந்த ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாணிடம், பழனி பொதுமக்கள் சாா்பிலும், பழனி ஸ்ரீகந்தன் அருள் அறக்கட்டளை சாா்பிலும் மீண்டும் பழனியிலிருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதே ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் தொடா்பு கொண்ட பவன் கல்யாண் பழனியிலிருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்க கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, கடந்த ஏப். 3-ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து பேருந்து சேவையை அவா் தொடங்கி வைத்தாா். பிறகு பேருந்து செல்வதற்கான வழித்தடம், தமிழக- ஆந்திர மாநில அரசுகளின் வழித்தட அனுமதி என அனைத்தும் பெறப்பட்டு திங்கள்கிழமை முதல் பழனியிலிருந்து பேருந்து சேவை முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

பழனி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கேஜி. மருத்துவமனை மருத்துவா் ராமசாமி தலைமை வகித்தாா். பழனி ஸ்ரீகந்தன் அருள் அறக்கட்டளை நிா்வாகிகள் ஆடிட்டா் அனந்தசுப்ரமணியம், சங்கராலயம் சிவக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அரிமா சுந்தரம், நேரு, எஸ்ஆா்எம் பாலாஜி, ஜெயம் ஜூவல்லரி ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அப்போது பேருந்துக்கு பழனி கோயில் சிவாச்சாரியா் காா்த்திக் சிவம் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினாா். இதன் பிறகு பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பழனியில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்தப் பேருந்து கிருஷ்ணகிரி, தா்மபுரி, சித்தூா் வழியாக திருப்பதிக்கு காலை 6.30 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில் தினமும் இரவு 7.30 மணிக்கு புறப்படும் பேருந்து பழனிக்கு காலை 7.30 மணிக்கு வந்தடையும்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க