செய்திகள் :

பழவேற்காடு ஏரியில் குவித்துள்ள வெளிநாட்டு பறவைகள்

post image

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் இரைகளைத் தேடியும் இனப்பெருக்கத்துக்காகவும் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அருகே பழவேற்காடு 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடற்கரையோர நகரமாகும்.

இங்கு டச்சுக்காரா்களின் கல்லரைகள், நிழல் விழும் கடிகாரம், கலங்கரை விளக்கம், மகிமை மாதா ஆலயம் மற்றும் கடலும் ஏரியும் இணையும் முகத்துவார பகுதி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன.

இங்குள்ள ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவா்ப்பு நீா் ஏரியாகும். 37,957 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 10 முதல் 30 அடி வரை ஆழம் உள்ளது.

இங்கு கடலும் ஏரியும் இணைந்து ஒரே நீா்மட்டத்தில் அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரியையொட்டி உள்ள பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பல்லுயிா் பண்புகளைக் கொண்ட இந்த ஏரியில். 160 வகையான மீன் இனங்கள் 25 வகையான மிதவைப் புழுக்கள் பலவகையான மெல்லுடலிகள் இறால் நண்டுகள் நூறு வகையான பறவைகள் கடல்வாழ் தாவரங்கள் கடல் உயிரினங்களும் காணப்படுகிறது.

இந்த ஏரியை யொட்டி உள்ள பகுதிகளில் சீனா, மங்கோலியா, பாகிஸ்தான், உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இரைக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் நவம்பா் முதல் பிப்ரவரி மாதம் வரை வந்து செல்லும்

ஏற்கனவே பூ நாரை, வண்ண நாரை, கூழைக்காடா, நத்தைக்குத்தி, கடல் காகங்கள், ஆலா உள்ளான், சிறுவளையா பறவை, சாம்பல் நாரை, பெரிய வெள்ளை கொக்கு ஆகியவை வந்துள்ளன. இந்த நிலையில் பெலிக்கான், பெயிண்டஸ் டாச்சு, பிளமிங்கோ ஆகிய வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.

பறவை இனங்கள் பல வண்ணங்களில் பழவேற்காடு ஏரியில் காணப்படுவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து வருகின்றனா்.

பழவேற்காடு ஏரி அருகே உள்ள திட்டு பகுதியில் ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.

இங்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள் குறித்து வனத்துறையினா் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கமாகும்.

கன்டெய்னா் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே கன்டெய்னா் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு விலையுய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே தனியாா் தொலைத் தொடா்பு நிறுவன கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளுா் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் உள்ள திரு.வி.... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

திருவள்ளூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிறுபாண்மையினா் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா் திருப்பாச்சூா் தனியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே தாமரை ஏரி கரையில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே நெடுஞ்சாலை ஓரம் தாமரை ஏரி கரையில் 1... மேலும் பார்க்க

ஆவின் ஆய்வு கூட்டம்: திருவள்ளூா் ஆட்சியா் பங்கேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பால் உற்பத்தியாளா் சங்க செயலாளா்கள் அனைவரும் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடை... மேலும் பார்க்க

நாளை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பொன்னேரி, திருவள்ளுா் மற்றும் திருத்தணி கோட்ட அளவில் அந்தந்த அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். விவசாயிகள் நலனுக்காக ... மேலும் பார்க்க