செய்திகள் :

பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி கண்ணீா் அஞ்சலி போராட்டம்

post image

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராமத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கண்ணீா் அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.

ஆலங்காடு கிராமத்தில் கோரையாற்றின் வழியாக உப்பூா், வெள்ளாதிகாடு, துறைகாடு, வீரன்வயல், மங்காடு, செங்கங்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மக்கள் பாலத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த பாலம் உடைந்த நிலையில் பள்ளி மாணவா்கள், மீனவா்கள், விவசாயிகள் போக்குவரத்துக்கு சிரமபட்டனா். பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இணைந்து கண்ணீா் அஞ்சலி பதாகை வைத்து பறை இசைத்து பாலத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒன்றிய செயலாளா் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினா் ஜோதிபாசு முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் டி. முருகையன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். இறந்த சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்வது போல பாலத்துக்கு சடங்கு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க