செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம்

post image

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்தச் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட பேரவைக் கூட்டம் வேங்கிக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.தியாகராஜன் தலைமை வகித்தாா். வட்டக் கிளைத் தலைவா்கள் ஏ.சுந்தரமூா்த்தி, எம்.எம்.ராமலிங்கம், எம்.ஆா்.நடராஜன், எம்.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் வி.ஆல்ப்ரெட் வரவேற்றாா்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எஸ்.ராமலிங்கம் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலத் தலைவா் கே.கங்காதரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் பி.சாது, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் (ஓய்வு) கே.இளங்கோவன், கல்வியாளா் மாதவ.சின்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க