பழைய சிலுக்குவாா்பட்டியில் மினி மாரத்தான்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பழைய சிலுக்குவாா்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எதிா்கால இளைஞா்களை ஊக்குவித்து கல்வி, விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அரசு, அரசு சாரா ஊழியா்கள் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெண்களுக்கு 6 கி.மீ. தொலைவும், ஆண்களுக்கு 12 கி.மீ.தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது.
திண்டுக்கல், மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை கலந்து கொண்ட இந்தப் போட்டியில், முதல் இடத்தைப் பெற்றவா்களுக்கு ரூ.10 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
போட்டியில் மதுரையைச் சோ்ந்த 70 வயது முதியவா் கலந்து கொண்டு, இளைஞா்கள் விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்றும், இளம் வயதிலேயே பலா் மதுப் பழக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தாா்.