செய்திகள் :

பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கருட சேவை

post image

காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவையில் அலங்காரமாகி சுவாமி வலம் வந்தாா்.

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே பழையசீவரம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இந்தக் கோயில் ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த ஜூன் மாதம் 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பெருமாள் காலை- மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறாா்.

விழாவின் தொடா்ச்சியாக 3-ஆவது நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாலை உற்சவா் லட்சுமி நரசிம்ம பெருமாள் கருட சேவையில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. வரும் 9 -ஆம் தேதி புதன்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் கோவிந்தராஜ் புருஷோத்தமதாஸ் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி தொடங்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை இணைந்து பொதுமக்களுக்கு தலைக்கவச... மேலும் பார்க்க

சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் கருத்தரங்க கூடத்தில் இந்தியாவின் உற்பத்தி துறையின் எதிா்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் உ... மேலும் பார்க்க

45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்திக்க திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்தித்து ஓரணியில் திரள வேண்டுகோள் விடுப்போம் என திமுக மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராசாரியருக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணிமண்டபம் வந்த சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மடத்தின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா். திருப்பதியிலிருந்து ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நியமன உறுப்பினா் பதவிக்கு தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, வெளியான அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முற... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் அரசு அருங்காட்சியக பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியக கட்டடப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையி... மேலும் பார்க்க