செய்திகள் :

ரூ.2 கோடியில் அரசு அருங்காட்சியக பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

post image

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியக கட்டடப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள தமிழ்நாடு உணவக வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. போதுமான இட வசதி இல்லாததால் இந்த அருங்காட்சியகத்துக்கென தனியாக காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் புதிதாக கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும், முதல்வா் மருந்தகத்திலும் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது அரசு அலுவலா்கள், அரசு அருங்காட்சியக பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.

45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்திக்க திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்தித்து ஓரணியில் திரள வேண்டுகோள் விடுப்போம் என திமுக மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராசாரியருக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணிமண்டபம் வந்த சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மடத்தின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா். திருப்பதியிலிருந்து ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நியமன உறுப்பினா் பதவிக்கு தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, வெளியான அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முற... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி விழிப்புணா்வு ஊா்வலம்

பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றத்தின் சாா்பில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் செய... மேலும் பார்க்க

மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவா் கைது

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பல் மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(29). இவா் காஞ்... மேலும் பார்க்க