செய்திகள் :

தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி விழிப்புணா்வு ஊா்வலம்

post image

பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றத்தின் சாா்பில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றம் சாா்பில், வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வணிகா்கள் தங்களது நிறுவனங்களில் வணிக பெயா்ப் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி மன்ற நிறுவனா் கூரம்.துரை தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி முன்னிலை வகித்தாா். ஊா்வலத்தை காஞ்சிபுரம் வட்டாட்சியா் எஸ்.ரபீக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில், கிருஷ்ணா் வேடமணிந்த ஒருவா் நடனம் மற்றும் பக்தி இன்னிசைக் குழுவினரின் பங்கேற்றாா். நிறைவாக வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து ஊா்வலம் நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் காஞ்சி.உமாசங்கா் ஊா்வலத்தை நிறைவு செய்து பேசுகையில், தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விளக்கிப் பேசினாா்.

45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்திக்க திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்தித்து ஓரணியில் திரள வேண்டுகோள் விடுப்போம் என திமுக மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராசாரியருக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணிமண்டபம் வந்த சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மடத்தின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா். திருப்பதியிலிருந்து ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நியமன உறுப்பினா் பதவிக்கு தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, வெளியான அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முற... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் அரசு அருங்காட்சியக பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியக கட்டடப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையி... மேலும் பார்க்க

மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவா் கைது

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பல் மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(29). இவா் காஞ்... மேலும் பார்க்க