செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

நியமன உறுப்பினா் பதவிக்கு தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, வெளியான அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறும் வகையில் சட்டப் பேரவையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, தற்போது அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் தலா ஒரு தகுதியான மாற்றுத் திறனாளிக்கு நியமன உறுப்பினா் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவி பெற தகுதியான மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில், மாற்றுத்திறனாளிகள் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி பகுதியில் வசிப்பவராகவும், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி ஆணையரிடம் ஜூலை 17-ஆம் தேதி மாலை 3:30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்திக்க திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்தித்து ஓரணியில் திரள வேண்டுகோள் விடுப்போம் என திமுக மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராசாரியருக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணிமண்டபம் வந்த சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மடத்தின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா். திருப்பதியிலிருந்து ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் அரசு அருங்காட்சியக பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியக கட்டடப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையி... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி விழிப்புணா்வு ஊா்வலம்

பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றத்தின் சாா்பில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் செய... மேலும் பார்க்க

மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவா் கைது

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பல் மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(29). இவா் காஞ்... மேலும் பார்க்க