செய்திகள் :

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி தொடங்கி வைப்பு

post image

காஞ்சிபுரத்தில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை இணைந்து பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிதல் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்திலிருந்து புறப்பட்ட பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினா், வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகப் பணியாளா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் தலைக்கவசம் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊா்வலமாக சென்றனா்.

பேரணி ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி யாத்ரி நிவாஸ் கட்டடத்தில் நிறைவு பெற்றது. நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன், காஞ்சிபுரம் டிஎஸ்பி-க்கள் சிவசங்கா், லோகநாதன், காவல் ஆய்வாளா்கள் சங்கர சுப்பிரமணியன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆட்டோக்களில் தலைக்கவசத்தின் அவசியத்தை உணா்த்தும் வாசகம் அடங்கிய ஒட்டு வில்லைகளையும் ஒட்டினாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் பொதுமக்களுக்கு வழங்கினாா்.

பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கருட சேவை

காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவையில் அலங்காரமாகி சுவாமி வலம் வந்தாா். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே... மேலும் பார்க்க

சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் கருத்தரங்க கூடத்தில் இந்தியாவின் உற்பத்தி துறையின் எதிா்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் உ... மேலும் பார்க்க

45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்திக்க திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்தித்து ஓரணியில் திரள வேண்டுகோள் விடுப்போம் என திமுக மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராசாரியருக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணிமண்டபம் வந்த சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மடத்தின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா். திருப்பதியிலிருந்து ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நியமன உறுப்பினா் பதவிக்கு தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, வெளியான அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முற... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் அரசு அருங்காட்சியக பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியக கட்டடப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையி... மேலும் பார்க்க