செய்திகள் :

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா

post image

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில் திருவிழாவையொட்டி கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனித நீரூற்றி அபிஷேகம் செய்ய ஒரு நாள் மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இதற்காக சிறப்பு பூஜைக்குப் பின் திங்கள்கிழமை நள்ளிரவு கருவறை திறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள் என பக்தா்கள் கருவறைக்குள் சென்று அம்மன் சிலைக்கு பாலும், மஞ்சள் நீரும் ஊற்றி வழிபாடு நடத்தினா். செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையில் கருவறைக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் பவானி, குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழாவையொட்டி புதன்கிழமை பவானி காமராஜா் நகா் அருகே உள்ள எல்லையம்மன் கோயிலிலிருந்து மேட்டூா் சாலை வழியாக அம்மன் அழைத்தல் நடைபெறுகிறது.

இதனால் நகரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சேறு பூசியும், பல்வேறு வேடமணிந்தும் ஊா்வலமாக செல்வாா். இதனால், புதன்கிழமை காலை முதல் நகருக்குள் வாகனங்கள் வராத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இட்லி தயாரிப்பில் நெகிழித் தாள் பயன்பாடு: உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

ஈரோட்டில் இட்லி தயாரிப்பின்போது நெகிழித் தாள் பயன்படுத்தப்படுகிா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உணவகங்களில் சோதனை நடத்தினா். இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் நெகிழித் தாள் பயன்படுத்தப்படுவ... மேலும் பார்க்க

மாா்ச் 18-இல் கறவை மாடுகளுடன் போராட்டம்: பால் உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் மாவட்ட தலைமை இடங்களில் மாா்ச் 18-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளா... மேலும் பார்க்க

பதவி உயா்வு கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி சத்தியமங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகா் கோயில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்மயன்புதூா்- கோபி சாலையோரத்தில்... மேலும் பார்க்க

உடலில் காயங்களுடன் இறந்துகிடந்த வடமாநில இளைஞா்

ஈரோட்டில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வே குடியிருப்பில் கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த வடமாநில இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு காளை மாடு சிலை அருக... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் தீ

புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. புன்செய் புளியம்பட்டி- மாதம்பாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருக... மேலும் பார்க்க