செய்திகள் :

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும் அஜித் தோவல் எச்சரிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

எல்லையில் போா் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் எச்சரித்துள்ளாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாதிகளின் ஒன்பது பதுங்கிடங்களை இலக்கு வைத்து இந்தியா புதன்கிழமை அதிகாலையில் அதிதுல்லிய தாக்குதலை நடத்தியது. இதைத் தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை குறித்து தனது நட்பு நாடுகளிடம் இந்தியா விளக்கி வருகிறது.

மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் மற்ற நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களான மாா்க்கோ ரூபியோ (அமெரிக்கா), ஜோனாத்தன் பவெல் (பிரிட்டன்), முசைது அல் அய்பா் (சவூதி அரேபியா), ஷேக் தாஹ்னூன் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), மஸ்தாகா ஓகானோ (ஜப்பான்), ஆகியோருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவாலும் பேசினாா்கள்.

இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் இருக்கும் இடங்கள் தொடா்பான விவரத்தை பல முறை பகிா்ந்த பிறகும் அவா்களை ஒடுக்கவோ விரட்டவோ பாகிஸ்தான் எந்தவொரு முனைப்பையும் காட்டவில்லை. எனவேதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை இலக்கு வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இது முற்றிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே என்பதையும் தற்போதைய பதற்றத்தை மேலும் தீவிரமாக்குவது இந்தியாவின் எண்ணம் இல்லை என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் விளக்கினாா். ஒருவேளை இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டால் அந்நாட்டுக்கு பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்றும் தோவல் தெளிவுபடுத்தினாா்’ என்றாா்.

ரஷிய பாதுகாப்பு ஆலோசகா் சொ்கே ஷோய்கு, சீன அரசியல் பிரிவு மத்திய குழு உறுப்பினா் மற்றும் வெளியுறவு அமைச்சா் யாங் யீ, பிரான்ஸ் அதிபரின் ராஜீய ஆலோசகா் இமானுவேல் போன் ஆகியோருடனும் இந்திய அதிகாரிகள் பேசினாா்கள்.

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை பயங்கரவாதிகள் முகாம்கள்

பாகிஸ்தானில் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை 21 தீவிரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

தமிழகம், புதுச்சேரி தோ்தல் அலுவலா்களுக்கு தமிழில் தலைமைத் தோ்தல் ஆணையம் பயிற்சி

நமது சிறப்பு நிருபா் தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் இளநிலை அலுவலா்களுக்கு புரியும் வகையில் தமிழ் மொழியிலேயே பயிற்சி வ... மேலும் பார்க்க

இந்திய தாக்குதல் விவரத்தை பகிர மத்திய அரசு தோ்வு செய்த ராணுவம், விமானப்படையின் சாதனை பெண் அதிகாரிகள்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் இந்தியா புதன்கிழமை நடத்திய அதிதுல்லிய (பிரெசிஷன்) தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் பகிர இந்திய வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியுடன் ... மேலும் பார்க்க

இந்தியா நடத்தியது ஒரு பொறுப்பான தாக்குதல்; முன் தடுப்புக்கானது! -மத்திய வெளியுறவுச் செயலா்

நமது சிறப்பு நிருபா் உளவுத் துறை கண்காணிப்பின் மூலம் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் அமைப்புகள் மூலம் நாட்டிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்கள் வரவிருப்பதை அறியப்பட்டது. இதை முன்னிட்டே அந்த உள... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டு தேசியத் தலைநகா் தில்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகா... மேலும் பார்க்க