கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்
பாஜக எம்எல்ஏ மகள் காலமானாா்
மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதியின் மகளும், ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனரும் அதிமுக பிரமுகருமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகா குமாா் (54) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.
அரிதான பாக்டீரியா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாம்பிகா குமாா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலமானாா்.
கட்டடக் கலை நிபுணா், தொழில்முனைவோா் மற்றும் கல்வியாளா் என பன்முகத் தன்மை கொண்ட கருணாம்பிகா குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
ஈரோடு மாவட்டம் பாசூா் அருகே சோளங்காபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
முதல்வா் இரங்கல்:
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்ற மகளை இழந்து வாடும் சரஸ்வதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.